ஹொரணை – அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள ‘செனஹஸே கெதெல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன்படி, நேற்றுமுன்தினம் (3) ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது. ...
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதல் சம்பவத்தின் ...
உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான விதிமுறைகள் தற்போது தயாரிக்கப்பட்டு ...
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமெரிக்கா ஆதரவளித்த போர்நிறுத்த நிபந்தனைகளை லெபனானின் ஆயுதமேந்திய ஹிஸ்புல்லா இயக்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற இந்த அமைப்பின் தலைவர் நயீம் காசிம் (Naim Qassem) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பேச்சுவார்த்தைகள் லெபனானுக்கு “வீணானவை” மற்றும் “அவமானகரமானவை” என்றும், லெபனான் மக்களின் பரந்த ...
2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்குப் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதிப் பத்திரங்களை தங்களது திணைக்கள இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் இப்பரீட்சை ...
அவுஸ்திரேலிய நிறுவனமொன்றிற்கு செலுத்தப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இணைய மோசடியாளர்களின் கைக்குச் சென்றமை தொடர்பான பொது திறைசேரியின் அறிக்கை, அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்ற குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு நேற்று (04) கூடிய போது, அந்த அறிக்கையை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ...
கடந்த மே மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது எட்டு டிங்கி படகுகள், இரண்டு கேனோ படகுகள் மற்றும் ஏழு டிரக்டர்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ...
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட, 83 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களுடன் மூன்று சீனப் பிரஜைகள் நேற்று (4) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் 35, 38 மற்றும் 50 வயதுடைய சீன நாட்டவர்களாவர். இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 55,800 சிகரெட்டுகளைக் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 17 இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற தரிசனத்தில் தமிழகத்தில் ஆதீனங்களின் செல்வாக்குப் பற்றியும் கடவுள் மறுப்புக் கொள்கையுடைய பெரியாரின் திராவிட சிந்தனையும் பற்றிப் பார்க்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாக இருந்தது. இங்கு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் இந்துமதம் ...
சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதன் அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதிக்கும் அடுத்தடுத்து பரவியது. இதில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. அவை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ...