Type to search

Headlines

யாழ்.தொடர்ந்து முடக்கப்படுகிறது

Share

சுவிஸ் மத போதகரினால் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதையடுத்து யாழ்ப்பாணம் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும்போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு இன்றைய தினம் பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். இம் மாவட்டங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்கலை மேற்கொள்ள அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிர தேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும்.

எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறி வித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link