Type to search

Local News

வீட்டிலிருந்த நகை, பணம் கத்தி முனையில் கொள்ளை

Share

யாழ்.கந்தர்மடம், மணல் தறை ஒழுங்கையில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த மின்குமிழை அகற்றிய கொள்ளையர்கள் பின்னர் சடுதியாக வீட்டுக்குள் நுழைந்து ஆசிரியையின் கழுத்தில் கத்தியை வைத்ததுடன், இதனால் பதற்றமடைந்த ஆசிரியை அபாய குரல் எழுப்ப முடியாமல் நின்ற நிலையில் சுமார் 3 பவுண் சங்கிலி, காப்பு மற்றும் தோடு, மோதிரம் ஆகியவற்றை பறித்துள்ளதுடன், வேறு பணம், நகை உள்ளதா என கேட்டு அச்சுறுத்திய துடன், வீட்டுக்குள் தேடுதல் நடத்தியுள்ளனர்.

மேலும் ஆசிரியை தனது தேவைக்காக தேநீர் தயாரித்து சுடு தண்ணீர் போத்தலில் வைத்திருப்பதனை அவதானித்த கொள்ளையன் சிறிய அளவு தேநீரை ஒரு குவளையில் எடுத்து ஆசிரியைக்கு கொடுத்து குடிக்க வைத்ததுடன், தானும் தேநீரை குடித்துள்ளான்.

இவ்வாறு சுமார் அரைமணி நேரம் வீட்டினுள் நின்ற கொள்ளையர்கள் அனைத்தையும் கொள்ளையடித்தவாறு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டினையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link