மனமும் நிறைவும் ஒரு ஆள் இருந்தான். நிறைய பணம் சம்பாதித்தான். ஆனால் செலவு செய்ய மனது வரவில்லை. கருமி அவன் என்ன செய்தான் என்றால் சேர்த்த பணம் முழுவதையும் ஒரு மரத்தடியிலே புதைத்து வைத்திருந்தான். வாரத்துக்கு ஒரு தடவை அந்த மரத்தடிக்கு வருவான். புதைத்த இடத்தை ஆவலோடு பார்த்துக்கொண்டிருப்பான். ...
குருவும் சீடனும் நாங்கள் நிறைய குருமார்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றோம். சீடர்களைப் பற்றியும் கேள்விப் பட்டிருக்கின்றோம். சீடர்களிலே இரண்டு வகை உண்டு. குருமார்கள் பார்த்து தேர்ந்தெடுக்கின்ற சீடர்கள் ஒரு வகை. இன்னொரு வகை எப்படி என்றால் சீடர்களே குருமார்களைத் தேர்ந்தெடுப்பது. குருமார்கள் சீடர்களைத் தேர்ந்தெடுக்கிறது தான் உயர்வு, நான் ...
குருவும் சீடனும் ஒரு ஊரிலே ஒரு பெரியவர் இருந்தார். அவர் ஒரு குரு அவர் தொடர்ந்து தியானக் கூட்டங்கள் நடத்துவார். அந்தக் கூட்டத்திலே கலந்து கொள்வதற்காக பல ஊர்களிலேயிருந்து சீடர்கள் நிறையப் பேர் வருவார்கள். போவார்கள். ஒருநாள் அங்கே கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்திலே சீடர்களிலே ஒருவன் ...
சாத்தானின் குரல் ஒரு பெரிய கடல். அதிலே ஒரு பெரிய படகு சென்று கொண்டிருக்கிறது. அந்தப் படகிலே ஒரு பெரியவர் உட்கார்ந்திருக்கிறார். அவர் ஒரு சாது! அதே படகிலே இன்னும் சிலபேர் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அந்த சாதுவை கேலி செய்வது – கிண்டல் செய்வது. ...
ஞானியார் நிலை ஒரு குரு இருந்தார்! ஜென் குரு! அவரிடம் ஒரு பழக்கம். வேறு என்ன.. அப்பப்ப கொஞ்சம் திருடுவார். அவ்வளவு தான்! பெரிதாக ஒன்றும் திருட மாட்டார்.! அவர் ஈடுபடுவது எல்லாம் சின்னச் சின்ன திருட்டு தான்! அடுத்தவர்களுக்குச் சொந்தமான சின்னச் சின்னப் பொருட்களை திருட வேண்டியது ...
கனவும் விழிப்பும் ஒரு ஆள் இருந்தான். அவனாலே தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அதனால் என்ன செய்தான். ஒரு நாள் இரவு மெதுவாக எழுந்தான் வீட்டைத் திறந்து வெளியிலே வந்துவிட்டான். மனைவி, ஒரு மகன் இவங்க இரண்டு பேரையும் விட்டுவிட்டுப் போய்விட்டான். அந்த பிள்ளைக்கு அப்பா மேலே ரொம்ப ...
எனக்குள் நான் ஒரு பெரியவர் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். “நீ ஒரு ஆளா? இரண்டு ஆளா?” என்றார். இப்படிக் கேட்டதும் அந்தப் பெரியவர் மேலேயே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. “அவர் இப்போது நிதானத்திலேதான் இருக்கிறாரா இல்லையா?” என்று! பார்ப்பது எல்லாம் இரண்டு இரண்டாக தெரிந்தால் அது ...
நீதி விசாரணை மனுநீதிசோழன் வரலாறு நமக்குத் தெரியும். அது மாதிரி நீதி தவறாத ஆட்சியாளர்கள் பலபேர் இருந்திருக்கிறார்கள் இந்த உலகத்திலே! ஹஸரத் உமர்பின் கத்தாப் (ரலி) என்று ஒருத்தர். இஸ்லாத்தின் இரண்டாவது கலிபா இவர். அவருடைய ஆட்சிக் காலத்திலே நடந்த ஒரு நிகழ்ச்சி. அந்த மன்னருக்கு ஒரு மகன். ...
மனமும் சிந்தனையும் ஒருத்தரைப் பார்த்து, உன்னுடைய நண்பர்கள் யார்? என்று ஒரு கேள்வி கேட்டுப் பாருங்கள். கொஞ்சம் யோசித்து யோசித்து பதில் சொல்லுவார். அவரிடம் உன்னுடைய எதிரிகள் யார்? என்று கேளுங்கள். கட கட என்று ஒப்பிப்பார். நம்ம மனது இருக்கே. அது எப்படின்னா. நம்ம நண்பர்களைவிட எதிரிகளை ...
போர் (BORE) “1946 இல் நான் வெளிநாடு போயிருந்தபோது ” என்று பேச ஆரம்பிப்பார் ஒரு பெரியவர். உடனே பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் மெதுவாக எழுந்து நழுவ ஆரம்பித்து விடுவார்கள் ஏன் அப்படி நழுவ ஆரம்பிக்கிறார்கள்? அவர் வெளிநாடு போய்விட்டு வந்த கதையை கேட்பதற்கு விருப்பம் இல்லாமலா? அப்படி ...