கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றால் மேலும் 20 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உட்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 17 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். ...
யாழ்.சிறைச்சாலையில் குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலைகயில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களை பிணையில் விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள சிறப்பு ...
கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டாவது இலங்கையரின் உடலை தகனம் செய்யும் நடவடிக்கை நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பொது கல்லறையில் அவரது உடல் பாதுகாப்பாக எரியூட்டப்பட்டுள்ளது. இதன்போது நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதானிகள், நீர் கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச ...
யாழ்ப்பாணம் நாவாந்துறை காபிஅபூபக்கர் வீதியில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், குறித்த நபர் நாவாந்துறை பகுதியில் மூன்று குடும்பங்களின் வீடுகளில் தங்கிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாள்தோறும் 200 பேருடன் மோடி தொலைபேசியில் பேசி தகவல் கேட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்கான பலன்கள் குறித்து அவர் நாள்தோறும் 200 பேருடன் தொலைபேசியில் பேசி தகவல் கேட்டு ...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 2 வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சத்தை அடையலாம் என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். உயிர்க்கொல்லி வைரஸான கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வல்லரசு நாடான ...
“தனது கால கட்டத்தில் விளையாடிய வீரர்களின் சச்சின், லாரா தான் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்,’’ என, அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் கணித்துள் ளார். அவுஸ்திரேலிய முன்னாள் ‘சுழல்’ வீரர் ஷேன் வோர்ன் (வயது-50), இவர் ‘இன்ஸ்டா கிராம்’ சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட ...
நாடுமுழுவதும் ஊரடங்கு வேளையில் வீதிகளில் நடமாடிய 7 ஆயிரத்து 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆயிரத்து 702 வாகனங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். நாடுமுழுவதும் தொடர் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 19 மாவட் டங்களில் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது. இந்த நிலையில் ...
கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை யாரும் அறிந் திருக்கவில்லையென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர் தொற்றுக்குள்ளாகும் விதத்தில் வெளியில் நடமாடியவருமல்ல என் றும் தெரிவித்துள்ளனர். இலங்கையின் இரண்டாவது கொரோனா தொற்று உயிரிழப்பு நேற்று பதிவாகியது. முஹம்மத் ஜமால் என்பவரே உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாக ...
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் உட்பட 7 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள கொரோனா பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ...