வவுனியா நகர சபை சுகாதார பரிசோதகருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வவுனியா நகர சபையின் ...
யாழ்ப்பாணம் நகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 30 பேர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடும் எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டனர். முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியைப் பேணாதவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ...
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர்கள் சாரதிக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை வழங்கி தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளார். ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாடகைக்கு அமர்த்திய முச்சக்கர வண்டியில் ஒருவர் சாவகச்சேரிக்கு பயணித்துள்ளார். அவ்வாறு பயணித்தவர்கள் சாவகச்சேரி சந்தியில் ஓர் பைக்கேற் குளிர்பானம் அருந்தியுள்ளனர். ...
இலங்கையில் கொரோனா வைரஸின் நிலைமை மோசமானால் நாடு முழுவதும் முடக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டை முடக்கும் அவசியம் உள்ளதா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடு முழுவதும் முடக்கப்படுவதற்கான அவசியம் குறித்து விவாதம் நேற்று கோவிட் தடுப்புக்கான தேசிய ...
கோவிட் தடுப்பூசி ஏற்றும் முதலாம் கட்டம் மூலம் மூன்று மாதங்கள் செல்லும் வரை கொரோனா வைரஸ் தொற்றும் வேகம் குறைவாகும். அத்துடன் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட முதியவர்கள் அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசியை பரிந்துரைக்கப்பட்ட காலத்திலேயே ஏற்றிக் கொள்ள வேண்டும் என ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியை ...
அதிசயங்களால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. இறுக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கை மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தாமதித்தால் நாட்டை முழுமையாக முடக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர், வைத்திய கலாநிதி நவீன் டி ...
உயர்பதவிகளில் இருக்கக்கூடிய அதிகாரிகள் தற்துணிவு உடையவர்களாகவும் தமது பதவிகளை மக்கள் பணிக்காகப் பயன்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மாறாக, தமக்குக் கிடைத்த பதவி இறை வனால் தரப்பட்டது என்ற நினைப்பும் இறை வனால் தரப்பட்ட பதவியை மக்கள் தொண்டு செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற மனத்திடமும் இருக்க வேண்டும். ...
விருந்துபசாரங்கள், கூட்டங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடு களிலும் நடத்த முடியாது என இராணுவத் தளபதியும் கோவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். நாட்டில் கொரோனாத் தொற்று தீவிர மடைந்தவரும் நிலையில் மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் திருமண நிகழ்வுகள், விருந்துபசாரங்கள், கூட்டங் ...
நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப் படுவதாக கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். நாளை திங்கட் கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி எதிர்வரும் ...
வடக்கில் பல மாதங்களாக இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்தும் வங்கிகளில் வைப்புக்களில் இருப்பதுமாக சுமார் 50 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, இவர்களால் சுமார் 150 பவுண் வரையான நகைகள் கொள்ளையிடப் பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ...