Type to search

Local News

மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு

Share

மனநிலை பாதிக்கப்பட்ட மகனால் தாக்கப்பட்டு தந்தை உயிரிழந்த சம்பவம் புத்தூர் இராசபாதை வீதியில், சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது.


அதே இடத்தைச் சேர்ந்த 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சீனிவாசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.


மகனுக்கும் தந்தைக்கும் இடையில் சிறு தர்க்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது மகன் இரும்பு கம்பியால் தந்தையை தாக்கியுள்ளார்.


தாக்குதலுக்கு உள்ளான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து தலைமறைவாக இருந்த மகன் ஊர் மக்களால் பிடித்து அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


குறித்த நபர் மனநோயினால் பீடிக்கப் பட்டு இருந்ததாகவும் தினந்தோறும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சண்டைகள் இடம்பெற்று வந்ததாகவும் இளைய மகன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link