Type to search

Headlines

கொரோனாவால் இறப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் புதைக்க அரசாங்கம் தீர்மானம் எதிர்ப்புத் தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம்

Share

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடல்களை கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவு பகுதி மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

முஸ்லிம் சகோதரர்களால் பல்வேறுபட்ட பகுதிகள் முன் மொழியப்பட்ட போதிலும் அவற்றை தவிர்த்து யுத்தத்தால் இடம்பெயர்ந்து பல இன்னல்கள் மத்தியில் 2017ஆம் ஆண்டு பல கட்ட போராட்டங்களின் பின்னர் குடியேறிய எமது இரணைதீவு பகுதிகளில் உடல்களை அடக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கவலை அழிப்பதாக இரணைதீவு பங்குத்தந்தை மடுத்தீன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரணைதீவு பகுதியானது நீரேந்து பிரதேசமாக காணப்படுவதனால் கொரோனா
தொற்றுள்ள உடல்களை புதைப்பதனால் நீரூடாக தொற்று பரவ வாய்புள்ளதாகவும் அண்மைக் காலமாகவே இரணைதீவு மக்கள் குடியேறி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ற நிலையில் அரசாங்கததின் இம்முடிவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link