Type to search

Headlines

யாழின் முத்தீவுகள் சீனாவுக்கே அமைச்சரவை முடிவை மாற்ற முடியாது

Share

அரசியல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நெருக்கடிகளுக்காக அமைச்சரவை தீர்மானங்கள் மாற்றப்பட மாட்டாது.

யாழ். முத்தீவுகளில் சீன மின் உற்பத்தி வேலைத் திட்டம் தொடர்பான தீர்மானத்தில் எந்த மாற்றமும் இதுவரையில் கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், யாழில் மூன்று தீவுகளில் சீனா முன்னெடுக்கவிருந்த மின்உற்பத்தி வேலைத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து வினவியபோதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்ட எந்தவொரு தீர்மானமும் அரசியல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நெருக்கடிகளால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்படவில்லை என்பதை தெளிவாகக் கூறுகின்றோம் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link