Type to search

Headlines

மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய் கிளிநொச்சி வட்டக்கச்சியில் துயரம் தாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்

Share

கிளிநொச்சி – வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு தாயார் ஒருவர் கிணற் றுக்குள் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட் டுள்ளார்.

இந்தநிலையில், ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய குழந்தைகளை மீட்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவர்கள் அணிந்து சென்ற பாதணிகள் மற்றும் தொப்பி என்பன கிணற்றுக்கு அருகில் காணப்படுகின்றன.

கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே, குறித்த சம்பவம் இடம் பெற்றதாக முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்ற போதிலும், மீட்கப்பட்ட பெண் பதில் ஏதும் கூற மறுப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் கீர்த்திகா (வயது-8), அட்சயா (வயது-5), ரெனேஜன் (வயது-2) ஆகிய குழந்தைகளே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கிணறு 30 அடி ஆழம் எனக் கூறப்படுவதால் சுழியோடியின் உதவியுடன் குழந் தைகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link