Type to search

Headlines

களுபோவில போதனாவில் விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளது

Share

களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொரட்டுவ பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவரே தொற்றிற்கு உள்ளாகியுள்ளார். வைத்தியசாலையின் 5வது விடுதியில் அவர் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

அவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, வைத்தியசாலையில் மருத்துவ உத்தியோகத்தர்களில் ஒரு பகுதியினரும் அந்த விடுதியில் சிகிச்சை பெற்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் 5ம் இலக்க விடுதி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மஹரகம ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த விடுதி நோயாளர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link