Type to search

Local News

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா

Share

சிலாபம், நாத்தாண்டியா பகுதி யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் நேற்று முன்தினம் கொரோனா தொற்று தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐந்து பேர் கொண்ட இக்குடும்பத்தில் நான்கு மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுகாதார துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 122 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link