Type to search

Headlines Local News News

நீரில் அடித்துச் செல்லப்பட்டமூன்று சகோதரர்களில் ஒருவர் சடலமாக மீட்பு!

Share

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்போன மூன்று சகோதர்களும் சோமாவதி வீதி,  சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களாவர்.

இவர்களில் 35 வயதுடைய லக்சான் பேரரேரா  என்பவர் மாத்திரமே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

24, 34  வயதுடைய மற்றைய இளைஞர்களின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை

மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link