செம்மணி புதைகுழி அகழ்வுகள் – இன்றுவரை 256 எலும்புக்கூடுகள்
Share
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்றுவரை 256 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணி கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கபட்டது. இரு நாள்கள் துப்புரவுப் பணிகள் இடம்பெற்ற பின்னர் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வுப் பணியின் ஒன்பதாம் நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அங்கு புதிதாக ஒரு மனித என்புத் தொகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கைலாயநாதர் சுபாகர் தெரிவித்துள்ளார்.
அகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.


