Type to search

Headlines Local News News

சங்கீதன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறிதரன் எம்.பி உரையாடல்

Share

இசைக் கலைஞரான சங்கீதனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையொன்று நடைபெற்றுள்ளது.

இந்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீதனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமையின் காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் அவருக்கான பிணைக்கோரிக்கையை சட்டத்தரணிகள் மூலமாக விடுக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறிதரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமாரவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, அமைச்சர் சந்திரசேகரருக்கும், சிறிதரன் எம்.பிக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

அந்த உரையாடலின்போதும், ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்தியதோடு சங்கீதனின் தாயாருடனும் தொலைபேசி வாயிலாக பேசி இருந்தமை நோக்கத்தக்கது .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link