உடவளவையில் 4.5 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா செடிகள் முற்றுகை!
Share
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து 2026.04.11 ஆம் திகதி உடவளவ காட்டில் ஒரு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில், மூன்று ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, 4.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 3 அடி உயரமுள்ள சுமார் 155,000 கஞ்சா செடிகள், சந்தேக நபர்கள் எவருமின்றி பறிமுதல் செய்யப்பட்டன.


