Type to search

Sports

லது- றஜீவ் இணைப்பாட்டம் யாழ்.சென்றல் காலிறுதிக்கு தகுதி

Share

யாழ்.கிரிக்கெட் சம்பியன் 2020 இன் மேற்படி தொடர் கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மகாஜன கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் யாழ்.சென்றல் அணி றெயின்போ அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய றெயின்போ அணி 45.2 ஓவர் களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியில் ஜெரூஸன் 68 ஓட்டங்களையும் நிதர்ஸன் 40 ஓட்டங்களையும் யதூஸன் 38 ஓட்டங்களையும் கிருபா 33 ஓட்டங்களையும் செந்தூரன், டனுஸாந் ஆகியோர் 10 ஓட்டங் களையும் பெற்றனர்.

களத்தடுப்பில் யாழ். சென்றல் அணியின் சலிஸ்ரன் 3 விக் கெட்டுக்களையும் நிஸான், கிரி ஷாந் தலா 2 விக்கெட்டுக்களையும் சுபாதீஸ், மதூஸன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

244 ஓட்;டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். சென் றல் அணி 35.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

போட்டியில் லது,றஜீவ் ஆட்டமிழக்காது முறையே 98,71 ஓட்டங்களையும் சலிஸ்ரன் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

களத்தடுப்பில் றெயின்போ அணியின் கிருபா 2 விக்கெட்டையும் செந்தூரன் ஒரு விக் கெட்டையும் கைப்பற்றினர்.

வெற்றி பெற்ற சென்றல் அணி காலிறுதிப் போட்டியில் மானிப்பாய் பரிஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link