Type to search

Sports

கெளதமனின் அதிரடி ஆட்டம் சென்றலைட்ஸ் அணி காலிறுதிக்கு தகுதி

Share

யாழ். கிரிக்கெட் சம்பியன் 2020 தொடரின் இரண்டாவது சுற்றின் 10 ஆவது போட்டி கடந்த 15 ஆம் திகதி சனிக் கிழமை மகாஜன கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் கௌதமனின் அதிரடி ஆட்டத்தால் சென்ற லைட்ஸ் அணி ஹாட்லியை யைற்ஸ் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லியைற்ஸ் அணி 37.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக் களையும் இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.

போட்டியில் சாகித்தியன் 41 ஓட்டங்களையும் சேயோன் 25 ஓட்டங்களையும் மாதவன் 21 ஓட்டங்களையும் பிரசாந் 22 ஓட்டங்களையும் கிரிதரன், புருசோத்தமன் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

களத்தடுப்பில் சென்ற லைட்ஸ் அணியின் ஜெரிக், டார்லின், அலன்ராஜ், ஸெனோஸன் ஆகி யோர் 2 விக்கெட்டுக்களையும் விதூஸன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணி 27.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களுடன் வெற்றி பெற்றது.

போட்டியில் கௌதமன் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை யும் பிரியலக்ஸன் 28 ஓட்டங் களையும் நிஸான் 26 ஓட்டங்க ளையும் ஜெனோஸன் 19 ஓட்ட ங்களையும் செல்ரன் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

களத்தடுப்பில் பிரதீஸ் மற்றும் சாகித்தியன் 2 விக்கெட் டுக்களையும் சேயோன் ஒரு விக் கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியில் வெற்றி பெற்ற சென்றலைட்ஸ் அணி 3 ஆவது காலிறுதிப் போட்டியில் யாழ். ஜொனியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link