Type to search

World News

உலகம் முழுவதும் 22 ஆயிரம் மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா

Share

உலகம் முழுவதும் மருத் துவ ஊழியர்கள் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற அனைத்து நாடுகளைச் சேர்ந்த மருத் துவத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய சிகிச்சையளித்து அவர்களைக் காப்பாற் றும் அளப்பரிய சேவையை செய்து வருகின்றனர்.

இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட அனைத்து மருத் துவத்துறை ஊழியர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தன்னலமற்ற சேவையாற்றி வருகின்றனர்.

கொரோனா ஒரு தொற்று நோய் என்பதால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து அவருக்கு சிகிச் சையளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.

போதிய முகக்கவசங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த போதிலும் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மருத்துவ ஊழியர்களுக்கு வைரஸ் பரவுகிறது.

வைரஸ் பரவிய நபர்களுக்கு சிகிச்சையளித்துவரும் மருத்துவ ஊழியர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் 22 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவ ஊழியர் களுக்கு கொரோனா தொற்றியதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளி யிட்டது.

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் .8) நிலவரப்படி உலகம் முழுவதும் 22 ஆயிரத்து 73 மருத்துவ ஊழியர்களுக்கு வைரஸ் பரவியதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

ஆரம்ப கட்டத் தகவலின் அடிப்படையில் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தே மருத்துவத்துறை ஊழியர்களுக்குக் கொரொனா பரவுவதாகவும், அதே சமயம் தொற்று ள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் வைரஸ் பரவுவதாகவும் உலக சுகாதார அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link