Type to search

Local News

15 பவுண் நகைகள் கொடிகாமத்தில் திருட்டு

Share

தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் 15 பவுண் நகை மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு வீடு புகுந்த இனந்தெரியாத மூவர் வீட்டில் வசித்த வயோதிபர்களான கணவன், மனைவியை ஒரீடத்தில் கட்டிப்போட்டு இருவரின் வாய்களையும் துணியால் கட்டிவிட்டு வீட்டிலிருந்த தாலிக்கொடி உட்பட பல நகைகளை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் 10 பவுண் தாலிக்கொடியும், 4 பவுண் சங்கிலியும், ஒரு பவுண் மோதி ரமும், ¾ பவுண் தோடும் மற்றும் 25000 ரூபா பணமும் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link