Type to search

Local News

முல்லையில் இளைஞன் ஒருவர் அடித்துப் படுகொலை

Share

நாயினால் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் இளைஞன் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் குமுழமுனை பகுதியை சேர்ந்த இராசலிங்கம் ரமேஷ் (வயது-26) என்ற இளைஞனே அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
பக்கத்து வீட்டு நாயொன்று குறித்த இளைஞன் வீட்டிற்குள் சென்று சாப்பாட்டை திருடி சென்றுள்ளது.

அதனால் குறித்த இளைஞன் நாயினை கட்டிவைத்து அடித்து துன்புறுத்தியுள்ளான். அதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் இளைஞனை பேசியுள்ளனர் இதனால் இருவருக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இவ் மோதலில் படுகாயமடைந்த குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மரணமடைந்துள்ளார்.

குறித்த இளைஞனின் மரணத்தை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மூன்று குடும்பத்தை சேர்ந்த 12 பேரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link