Type to search

Headlines

கண்காணிப்பை நிறைவு செய்து வீடு திரும்பியவருக்கும் கொரோனா

Share

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தல் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பிய வருக்கு 10 நாட்களின் பின் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 10ஆம் திகதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பிய அவர், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து கடந்த 24ஆம் திகதி அவர், மத்துகமவிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் 10 நாட்களின் பின்னர் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை மாற்றத்தால் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் அந்த நபர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐ.டி.எச்) சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link