Type to search

Local News

கொரோனா நோயாளி பயணித்த வாகனத்துக்கு பிரதேச வாசிகள் தீ வைப்பு

Share

கொரோனா நோயாளி பயணித்த வாடகை வாகனத்துக்கு பிரதேசவாசிகள் இணைந்து தீ வைத்துள்ளனர்.

கண்டி அக்குரணை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு வந்த வாகனத்தை கம்பளை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவினர், கம்பளை சிங்கப்பிட்டி பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் பின்னர் இந்த வாகனத்தில் நுண்ணுயிர் தொற்று நீக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த பிரதேச வாசிகள் கடந்த 31ஆம் திகதி இரவு வாகனத்துக்கு தீவைத்துள்ளனர்.

அக்குரணையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து இந்த வாகனத்திலேயே தனது வீடடுக்கு சென்றுள்ளார்.

வாகனத்தில் வந்தவர் கொரோனா நோயாளி என தெரிய வந்ததை அடுத்து, வாகனத்தின் உரிமையாளர் மற்றும் சாரதி ஆகியோர் இந்த தகவலை மறைத்துள்ளதுடன் வாகனத்தையும் மறைத்து வைத்திருந்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link