Type to search

Local News

உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்

Share

சமயங்களை விமர்சிப்பதை தவிர்த்து உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தனை செய்யங்கள் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகம் அமைதி பெற அனைவரும் பிரார்த்தியுங்கள். வழிபாடுதான் இன்று அனைவருக்கும் மன வலிமை தரும். மருத்துவ உலகின் வேண்டுதலுக்கு மதிப்பளித்து, அனைவரும் நோய் பரவாதுகாக்க பரிபூரண ஒத்துழைப்பு வழங்குங்கள்.

சமயங்களை விமர்சிப்பதைத் தவிருங்கள். சைவக் கோவில்களை சிலர் திட்டமிட்டு விமர்சித்து வருகிறார்கள். இது மிகவும் மன வருத்தத்துக்குரியது. திருக்கோவில்களை விமர்சிப்பதைத் தவிருங்கள். சில பிறமதத்தவர்கள் புனை பெயர்களில் சைவக் கோவில் களை இத்தருணத்தில் விமர்சித்து மக்களை குழப்பமடையச் செய்வதாக பலர் முறையிடுகிறார்கள்.

இவ்விடயம் தொடர்பாக சைவ மக்கள் கவலைப்பட வேண்டாம். “இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க” எனப்பதில் கூறுதல்தான் எங்கள் மரபு. வீண் விமர்சனங்களை யாரும் வளர்க்காதீர்கள் என்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link