Type to search

Local News

ஆடைத் தொழிற்சாலையில் நேற்றும் 124 பேருக்கு தொற்று

Share

நாட்டில் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இவ்வாறு அடையாளம் காணப் பட்டவர்கள் கொழும்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை மினுவாங்கொட கோவிட்-19 தொற்று கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 307ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காயிரத்து 749 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 307 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி யுள்ள நிலையில் இன்னும் ஆயிரத்து 429 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link