Type to search

Headlines

வவுனியாவில் 7 பேருக்கு கொரோனா உறுதி

Share

எழுமாற்றுப் பரிசோதனையில் வவுனியாவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகின.

அதில், செட்டி குளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த குருக்கள் புதுக் குளம் பகுதியைச் சேர்ந்த 5 பேருக்கும், பம்பை மடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 2 பேருக்கும் என 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள் ளான 7 பேரையும் கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுகாதார பிரிவினர், அவர்களுடன் தொடர்புடைய வர்களை தனிமைப்படுத்த நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link