Type to search

Headlines

மனைவிக்கு கொரோனா எனக்கு அறிவிக்கவில்லை.

Share

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக 3 சிறுவர்களும் தந்தையும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் நேற்றிரவு ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்றாளர்கள் 21 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இது குறித்து பெண்ணின் கணவன் தெரிவிக்கையில், கிளிநொச்சி அக்கராயன் மணியங்குளத்தினைச் சேர்ந்த தன்னுடைய மனைவிக்கு நேற்று பிற்பகல் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற போதிலும் தனக்கு குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை என்றும் குழந்தைகளை வைத்துக் கொண்டு தாம் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிடுவதாகவும் தம்மை சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துமே போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link