Type to search

Headlines

நூதன முறையில் ஆட்டோ சாரதியிடம் சங்கிலி அபகரிப்பு

Share

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர்கள் சாரதிக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை வழங்கி தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளார்.


ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாடகைக்கு அமர்த்திய முச்சக்கர வண்டியில் ஒருவர் சாவகச்சேரிக்கு பயணித்துள்ளார். அவ்வாறு பயணித்தவர்கள் சாவகச்சேரி சந்தியில் ஓர் பைக்கேற் குளிர்பானம் அருந்தியுள்ளனர்.

அதன்பின்பு கைதடியூடாக கோப்பாய் வீதியில் பயணித்த சமயம் முச்சக்கர வண்டிச் சாரதி மயக்கமுற்றுள்ளார்.

இவ்வாறு மயக்கமுற்றவரின் கழுத்தில் இருந்த 2 தங்கப்பவுண் சங்கிலியை அபகரித்துக்கொண்டு முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர் தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் வீதியோரம் இருந்த சாரதியை அந்த வீதி வழியாக பயணித்தவர்கள் முதலில் மது போதையில் வீழ்ந்து கிடப்பதாகவே எண்ணியதனால் தாமதித்தே வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசார ணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link