Type to search

Uncategorized

யாழ்.மாவட்டத்தில் 38 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா

Share

யாழ்.மாவட்டத்தில் 38 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி நேற்றைய தினம் 727 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி. ஆர் பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 38 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேருக்குமாக வடக்கில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.


யாழ்ப்பாணம் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர் (கொடிகாமம் சந்தைத் தொகுதி வியாபாரிகள் உட்பட்டவர்கள்) யாழ். சிறைச்சாலையில் 08 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர் (தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்) உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், பூவசரங்குளம் வைத்தியசா லையில் இருவர் (வெளிநோயாளர் பிரி வில் சிகிச்சை பெற வந்தவர்கள்), கிளி நொச்சி வைத்தியசாலையில் இருவர் (வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்தவர் ஒருவர், தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் இருவர்) உட்பட்டவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link