Type to search

Headlines

கொரோனாத் தொற்று தீவிரம் வீடுகளிலும் நிகழ்வுகளுக்குத் தடை

Share

விருந்துபசாரங்கள், கூட்டங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடு களிலும் நடத்த முடியாது என இராணுவத் தளபதியும் கோவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனாத் தொற்று தீவிர மடைந்தவரும் நிலையில் மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் திருமண நிகழ்வுகள், விருந்துபசாரங்கள், கூட்டங் களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் வீடுகளிலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள், விருந்துபசாரங்கள், கூட்டங்களை நடத்த அனுமதியில்லை என கூறியிருக்கும் இராணுவத் தளபதி, கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை அத்தியாவசிய தேவையில்லாமல் அயல் வீடுகளுக்குச் செல்வது, உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வது மற்றும் உறவினர்களை அழைப்பதையும் நிறுத்துமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link