Type to search

Headlines

20ஐ நிறைவேற்ற முன் கலந்துரையாட வேண்டும்

Share

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு இன, மத மற்றும் அரசியல் தலைவர்களுடன் பரந்தளவிலான கலந்துரையாடல்களை நடத்தவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் கரு ஜயசூரிய அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

பத்திரிகைச் செய்திகளின்படி அரசியலமைப்பின் 20 வது திருத்தம், அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த விடயங்களை நீக்குவதற்கு முன்மொழிந்திருப்பதாக அறியமுடிகிறது.

எனவே இந்தத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் அரசாங்கம் இன, மத மற்றும் அரசியல் தலைவர்களுடன் பரந்தளவிலான கலந்துரையாடல்களை நடத்தும் என்று நம்புகின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link