Type to search

Headlines

முழங்காவிலில் 4 பேருக்கு கொரோனா வைரஸ்

Share

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 24 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேரின் மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்களில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ராகமையைச் சேர்ந்த 8 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

அவர்களில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தவர் உட்பட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link