Type to search

Headlines

தீவகத்தைச் சேர்ந்த பொது மக்கள் மருத்துவ கிளினிக்கை பெற இன்று விசேட ஏற்பாடு

Share

தீவகத்தை சேர்ந்த பொது மக் கள் மருத்துவ கிளினிக்கை பெற இன்று விசேட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.


இது தொடர்பில் யாழ்.பேதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி விசேட அறி விப்பொன்றை அறிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது,

இன்று 27ஆம் திகதி தீவகத் தைச் சேர்ந்த மருத்துவ கிளி னிக் பெறும் நோயாளர்களுக்கு மருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.


அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் 1 மணிவரையி லான நேரத்திற்குள் 021 222 2268 என்ற தொலைபேசி இலக் கத்திற்கு விபரங்களை வழங்கு மாறு பணிப்பாளர் கேட்டுக்கொண் டுள்ளார்.

அவ்வாறு தெரிவிக்குமிடத்தே நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் அவர்களது பிரதேசத் திற்கு அருகிலுள்ள அரச வைத்திய சாலைகளுக்கு பொதி செய்து அனுப்பி வைக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இன்று தீவகப் பிரதேசத்திற்காக முதலில் ஆரம்பித்து வைக்கப்பட வுள்ள இந்த நடடிவடிக்கை தொடர்ந் தும் ஏனைய பிரதேசங்களுக்கு ஆரம்பிக்க உள்ளதாகவும் அது தொடர்பான அறிவித்தல்கள் பின் னர் வெளியிடப்படு மென்றும் குறிப் பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் நோயாளர் பெரும் பாதிப்பை எதிர் நேர்க்கி வருகின்றனர்.

குறிப்பாக மருத்துவ கிளி னிக்கில் சிகிச்சை பெறுகின்ற வர்கள் எதிர்நோக்கும் பாதிப்பை யடுத்து யாழ்.போதனா வைத்திய சாலை நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக வும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link