Type to search

Headlines

ஐ.டி.எச் இல் உயிரிழந்த கொரோனா நோயாளி தொடர்பில் அச்சமடைய வேண்டாம்

Share

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொரோனா நோயாளி தொடர்பில் யாழ்.மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

இருந்தாலும் அவதானமாக இருக்க வேண்டுமென யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இ.தேவநேசன் தெரிவித்தார்.

நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட இறந்த கொரோனா நோயாளி யாழ்.நகர்ப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அவர் பங்குபற்றிய காலப்பகுதி நீண்டதாகக் காணப்படுவதால் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அச்சமடையத் தேவையில்லை.

இருப்பினும் குறித்த நபருடன் நெருங்கிப் பழகினார்கள் எனக் கருதப்படும் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 80 – 90 வரையான நபர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு சுகாதாரப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link