Type to search

Headlines

உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் நள்ளிரவு தகனம்

Share

கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டாவது இலங்கையரின் உடலை தகனம் செய்யும் நடவடிக்கை நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பொது கல்லறையில் அவரது உடல் பாதுகாப்பாக எரியூட்டப்பட்டுள்ளது.

இதன்போது நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதானிகள், நீர் கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய உறவினர்கள் இருவர் மாத்திரம் இறுதி நடவடிக்கையில் கலந்து கொள்ள முடியும்.

எனினும் அவரது தகன நடவடிக்கை யின்போது எந்தவொரு உறவினரும் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார்.

இவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link