வான்பாய ஆரம்பித்துள்ள நீர்த்தேக்கங்கள்
Share
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக நீர்த்தேக்கங்கள் பல வான்பாய ஆரம்பித்துள்ளன. தெதுருஓய, லுனுகம்வெஹர, ராஜாங்கணை நீர்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெதுருஓயாவின் 4 வான்கதவுகள் தலா 3 அடி திறக்கப்பட்டுள்ள. லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.


