மரணத்தில் முடிந்த கைகலப்பு
Share
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று அம்பலங்கொடை பகுதியில் நேற்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். பலப்பிட்டிய பகுதியில் வசிக்கும் 47 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரை கைதுசெய்வதற்கான தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


