Type to search

Headlines Local News News

சிதைந்த நிலையில் சடலம் மீட்பு – கிளிநொச்சியில் சம்பவம்

Share

குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுட்டத்தீவு கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று இரவு பொலிஸாருக்குத் தகவல் கிடைத்த நிலையில், கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன்படி, மீட்கப்பட்ட சடலம் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அவர் யார் என்பது  இதுவரை உறுதி செய்யபடவில்லை.

உயிரிழந்தவருக்குச் சொந்தமான உடமைகளோ அல்லது குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான பொருட்களோ சம்பவ இடத்தில் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மர்ம மரணம் குறித்து இன்று (19) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

நீதவானின் நேரடிப் பார்வையிடல் மற்றும் உத்தரவைத் தொடர்ந்து, சடலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link