மெக்சிகோவில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து 11 பேர் பலி!
Share
மெக்சிகோவில் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 41 பேர் பயணித்தனர்.
அவர்களில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஏனைய ஐந்து பேர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.
பயணிகளை ஏற்றிச் சென்ற அந்தப் பேருந்து, நயாரிட்டில் உள்ள பூங்காவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


