இலங்கையில் இருந்து நாடு திரும்பிய 240 ஈரான் கடற்படை மாலுமிகள்!
Share
இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள் நேற்று (14) ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானின் ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த 204 மாலுமிகளுமே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட துருக்கி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


