Type to search

Headlines News World News

ஆப்கானிஸ்தானில் கொடூரம்: அகதிகள் சென்ற லொறி கவிழ்ந்து 10 குழந்தைகள் உட்பட 18 பேர் பலி!

Share

கிழக்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை (மே 30, 2026) அன்று நேரிட்ட மிகக் கொடூரமான சாலை விபத்தில் 10 குழந்தைகள் மற்றும் 5 பெண்கள் உட்பட மொத்தம் 18 ஆப்கானிய அகதிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜலாலாபாத் நகரையும், தலைநகர் காபூலையும் இணைக்கும் லக்மேன் மாகாண நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானில் தங்கியிருந்த ஆப்கானிய அகதிகள், தங்களின் தாயகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த லொறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்ததாக லக்மேன் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மாலிக் நியாசாய் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த கோர விபத்தில் 29 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல தசாப்தங்களாக நீடிக்கும் உள்நாட்டுப் போர், மிக மோசமான சாலைக் கட்டமைப்பு, முறையற்ற ஓட்டுதல் பழக்கம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் இல்லாததே ஆப்கானிஸ்தானில் இதுபோன்ற தொடர் மரணங்களுக்கு முக்கியக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link