Type to search

Cinema

எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மீண்டும் அதிர்ச்சி தகவல்

Share

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை.

அந்த அளவிற்கு பேர் புகழை கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொரொனா தொற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகினர்.

ஆனால், அவரே லைவில் வந்து பேசியது பலருக்கும் கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்தது.

இவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது.

அதை தொடர்ந்து ரசிகர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர், பிறகு மருத்துவமனையில் இருந்து தம்ஸ் அப் சிம்பிள் காட்டினார் எஸ்.பி.பி.

இதை தொடர்ந்து அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்து வருவதாக அவருடைய மகன் சரண் கூறியிருந்தார்.

தற்போது மீண்டும் மருத்துவமனை தரப்பில் அவருடைய உடல்நிலை மிக மோசமாக உள்ளதாகவும், எக்மோ கருவி மூலம் தான் சுவாசிக்கின்றார் என்ற குண்டை தூக்கி போட்டுள்ளனர்.

இந்த தகவல் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link