விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுடனே உட லைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார். பட்டது பட்டு எந்நேரமும் பட்டு சிவனை ஏற்றுங் கள் போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம் என்றார் பட்டினத்தடிகள். மனித வாழ்வின் நிலையாமை பற்றி எடுத் துக் கூறியவர்களில் பட்டினத்தடிகளுக்கு நிகர் எவருமில்லை எனலாம். மனிதர்கள் தங்களைப் பக்குவப்படுத்தி ...
கொரோனாத் தொற்றின் அபாய கட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து செல்கின்றது. கொரோனா காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும் அந்தந்த மாகாணங்களில் எடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கொரோ னாத் தொற்று பிரகண்டம் அடையாமல் தடுக்கப்பட்டு வருகிறது. இருந்தும் கொரோனாத் தொற்றுடன் வாழப் பழகுவது தவிர்க்க முடியாது என்ற ...
எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்நாள். விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியான மாவீரர்களை நினைவுகூருகின்ற நாளாக அதனைத் தமிழ் மக்கள் பிரகடனம் செய் துள்ளனர். இந்த மண்ணில் விடுதலைப் போராட்டம் நடந்ததை எவரும் மறப்பதற்கும் மறுப்பதற் கும் இல்லை. விடுதலைப் புலிப் போராளிகளுக்கும் அரச படைத்தரப்புக்குமிடையே நடந்த சண்டையில் போராளிகளும் ...
2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை (பாதீடு) நேற்று முன்தினம் பிரதம ரும் நிதியமைச்சருமாகிய மகிந்தராஜபக் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு தரப்போகும் நன்மை என்ன என்று கேட்டால் எதுவுமில்லை என்பதுதான் பதில். 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் 2020ஆம் ஆண்டு ...
யாழ்ப்பாணத்தில் உணவுச்சாலை நடத்துகின்ற அன்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவரின் முகத்தில் வாட்டம் தெரிந்தது. களைப்பும் கவலையும் புரையோடியிருந்தன. காரணத்தை அறிவதற்காக என்ன நடந் தது என்று கேட்டேன்; பிஸ்னஸ் படான். என்ன செய்வதென்று தெரியவில்லை என்ற அவர், இடைவிடாது தொடர்ந்தார். முன்பெல்லாம் ஒரு இலட்சம் ரூபாய் வரை வியாபாரம் ...
2020ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய அத்தனை மாண வர்களும் பரீட்சைச் சுமையுடன் கொரோனாத் தொற்றுப் பரவுகையால் ஏற்பட்ட கஷ்டமான நிலைமைகளையும் எதிர்கொண்டனர். வழமையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ...
கர்ணனே தனது மிகப்பெரிய பலம் எனத் துரியோதனன் நினைத்திருந்தான். கர்ணனிடம் இருக்கக்கூடிய நாகாஸ்திரம் அவ்வாறானதொரு நம்பிக்கையை துரி யோதனனுக்குக் கொடுத்திருக்கலாம். எனினும் யார் தன்னுடைய பலம் என்று துரியோதனன் நம்பினானோ அவன் சாபம் பெற்றவனானான். ஆம், உற்றபோது கற்றது மறப்பாய் எனப் பரசுராமர் விதித்த சாபம் போர்க்களத்தில் வேலை ...
பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணனை மறந்ததனாலோ அன்றி அறம் பிழைத்ததனாலோ என்னவோ கொரோனாத் தொற்று பார்க்குமிடமெங்கும் பரவிக் கிடக்கிறது. நீக்கமற நிறைந்திருக்க வேண்டியதை உதறிவிட்டால், தீங்கிழைக்கக்கூடிய தீயவையே எங்கும் குடியிருக்கும். இதுவே உண்மைத் தத்துவம். இப்போது எங்கு பார்த்தாலும் கொரோனா என்பதே செய்தி. அதிலும் கொரோனாத் தொற்று உறுதி ...
இலங்கைப் பாராளுமன்றத்தின் 9ஆவது கூட்டத் தொடரின் போது சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்ற உரையில், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்; இந்த நாட்டின் ஆதிக்குடிகளின் தாய்மொழியான தமிழால் உங்களை வாழ்த்துகிறேன் எனக் கூறியிருந்தார். இலங்கை மண்ணின் ஆதிக்குடிகள் தமிழர் என்று ...
மஞ்சளும் இஞ்சியும் தமிழர் வாழ்வில் முதன்மைமிக்க ஔடதங்கள். இதில் மஞ்சள் தமிழர்களின் வழிபாட்டிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. மஞ்சள் மாவை குழைத்து அதில் அறுகம் புல் சாத்தி அதனைப் பிள்ளையாராக ஆவா கணம் செய்து வழிபடுகின்ற நடைமுறை நம்மிடம் உண்டு. இதற்கு மேலாக, திருமாங்கல்யதாரணத்தின்போது தாலியின் தகைமையை மஞ்சள் பெற்றுக் ...