பொதுவில் வார்த்தைகள் பெறுமதியானவை. அதிலும் கூறுவோரைப்பொறுத்தும் வார்த்தைகளின் பெறுமானம் உயர்ந்து நிற்கிறது. இஃது எல்லா விடயங்களிலும் இருக்கக்கூடிய ஒன்றுதான். மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள், சிறையில் இருந்த ஜவர்ஹலால் நேரு அவர்கள் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் என்பன ஏகப்பட்ட பெறுமதியுடையவை. குறித்த கடிதத்தின் உள்ளீடு ...
அறத்தைப் போதிப்பதற்காக எழுதப்பட்ட வையே புராண இதிகாசங்கள் ஆகும். இவை இந்து சமயம் சார்ந்த அறநூல்கள். இதுபோல கத்தோலிக்க சமயம் புனித விவிலியத்தின் மூலமாக மனித குலத்தை அறத்தின்பால் வழிப்படுத்துகிறது. பெளத்தத்துக்கு திரிபீடகமும் இஸ்லாத்துக்கு குரானும் தர்ம நூல்களாகும். ஆக, எல்லாச் சமயங்களும் அறத்தைப் போதிக்கின்றன. தாம் போதிக்கின்ற ...
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேசம் தீர்வு தரும் என்ற எமது நம்பிக்கை மெல்ல மெல்ல பொய்த்துப் போவதைக் காண முடிகின்றது. ஆம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களின் போதெல்லாம் இந்தத்தடவையாவது எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பியிருப்போம். எங்கள் நம்பிக்கையை உசார்படுத்துவது போல கூட்டத்தொடரின் முற்பகுதியில் ...
இன்று மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம். உலகு வாழ் பெண்களின் உரிமை தொடர்பில் ஓங்கி குரல் எழுப்புவதற்காக உலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட நாள். பொதுவில் பெண்களின் உரிமைகளை மறுக்கின்ற நாடுகளும் சமயங்களும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கவே செய்கின்றன. அதேவேளை ஒரு காலத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனம் இப்போது எவ்வளவோ அறுபட்டு ...
தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் வாழ்வியல் முறைகள், அவர்களின் தொழில் முயற்சிகள், பண்பாட்டு அம்சங்கள், கல்வி மற்றும் சமூக பொருளாதார நிலைமைகள் என்பவற்றை எடுத்து நோக்கும்போது, தொழில்சார் முயற்சிகளில் நம் தமிழ் இனம் பின்னடைவில் இருக்கிறது என்பதை இங்கு கூறித் தானாக ...
தமிழ் மொழியில் அரசன், அரசு, அரசாங்கம் என்ற சொற்பதங்கள் உள்ளார்ந்தமாக வித்தியாசமான பொருளைத் தந்து நின்றாலும் வெளியரங்கில் ஒத்தபொருளை உணர்த்துவதாகவே கொள்ளப்படுகின்றது. முடியாட்சி நிலவிய காலத்தில் அரசன் என்பவனே ஆட்சிக்குரியவன். மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அந்தக் குறைகளைத் தீர்த்து வைத்து நல்லாட்சியை வழங்குவது அரசர்களின் கடமையாக இருந்தது. எனினும் ...
ஊடகங்களில் நாளாந்தம் வெளிவருகின்ற செய்திகளைப் பார்க்கும்போது இதயம் கருகிப் போகிறது.அந்தளவுக்கு இயத்தை எரிக்கவல்ல கொடும் செயல்கள் சர்வசாதாரணமாக நடந் தேறுகின்றன. மூன்று பிள்ளைகளைக் கிணற்றுக்குள் வீசிக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்ற தாய். எட்டு மாதக் குழந்தையைக் கதறக் கதற அடித்துத் துன்புறுத்திய பெற்றவள். இளம் பெண்ணின் ...
இப்போது தமிழ் அரசியல் தரப்புகள் இரண்டு முக்கிய விடயங்களை எதிர்கொண்டுள்ளன. அதில் ஒன்று ஜெனிவா கூட்டத் தொடரில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைக் கையா ளுதல் என்ற விடயம். மற்றையது புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை முன்வைத்தல். மேற்குறித்த இரண்டு விடயங்களும் கவனமாகக் கையாளப்பட வேண்டும். அதிலும் ஜெனிவாவைக் கையாளுதல் என்பதில் ...
இன்று மாவீரர் நாள். தமிழர் உரிமைக் காகக் குரல் கொடுத்த மாவீரர்களை நினைவு ஏந்துகின்ற நாள். எனினும் மாவீரர்களை நினைவேந்துவத ற்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் மாவீரர்களை வீடுகளில் நினைவேந்துமாறு தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இஃது ஒரு தகவலுக்கானது. இங்கு மாவீரர்கள் என்போர் யாவர்? ...
தலைமைத்துவம் என்பதற்கான வரை விலக்கணத்தை முகாமைத்துவவியலாளர்கள் வகுத்துள்ளனராயினும் தலைமைத்துவம், தலைவன் என்ற சொற்பதங்களை எவரும் வரைவிலக்கணப்படுத்திவிட முடியாதென்பது நம் தாழ்மையான கருத்து. அதாவது தலைவன், தலைமைத்துவம் என்பதற்கான சில எடுகோள்களை, செயற் றிறன்களை வரைவிலக்கணத்தோடு முன் வைக்கலாமேயன்றி, கொடுக்கப்பட்ட வரை விலக்கணத்தை தாண்டி மக்கள் மனங்களில் என்றும் நீங்கா ...