முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நேற்றைய தினம் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நீண்ட நெடுங்காலமாக ஆதிசிவ வழிபாடு நடக்கின்ற குருந்தூர்மலையில் அடாவடித்தனமாக புத்தர்சிலையைப் பிரதிஷ்டை செய்தது எந்தவகையிலும் நியாயமாகாது. சிவத்தலம் இருக்கின்ற இடங்களைத் தமதாக்குகின்ற வில்லங்கத்தனத்தில் சிங்கள ஆட்சியாளர்களும் பெளத்த துறவிகளும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்வரிசையில் குருந்தூர்மலையில் புத்தர்சிலை நேற்றைய ...
வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய சிவாச்சாரியப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். உங்களுக்கான, இக்கடிதம் அவசரமாக எழுதப்படுகிறது. நேற்று முன்தினம் 09ஆம் திகதி காலை 9.48 மணி. யாழ்.பண்ணைச் சுற்றுவட்டத்தில் கடமையில் நின்ற போக்குவரத்துப் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை இடைமறித்து அவர்களின் வாகன அனுமதிப்பத்திரங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அந்நேரம் மோட்டார் ...
மனம் பற்றிப் பேசாத ஞானிகள் இல்லை. ஒரு மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவனின் மனமே மூலகாரணமாக அமைகிறது. அதனாலேயே மனமது செம்மையானால் மந்திரங்கள் செப்ப வேண்டாம் என திருமூலர் அறிவுரை வழங்கினார். எவ்வளவுதான் அறிவாற்றல் இருந்தாலும் அதனைச் செயல்படுத்தக் கூடிய மனப்பாங்கு இல்லை எனில், அறிவால் எந்தப் பயனும் ...
சமகாலக் கொரோனாத் தொற்றால், நயினாதீவில் நடைபெறவிருந்த தேசிய வெசாக் தினத்தை நடத்த முடியாதுள்ளதாக பெளத்த சாசன அமைச்சு அறிவித்துள்ளது. கெளதம புத்தபிரான் பரிநிர்வாணமடைந்த வெசாக் பெளர்ணமி புனித நாளை, நயினா தீவில் கொண்டாட முடியாமல் போயிற்று என்பதை நினைக்கும்போது எம் இதயம் கனக்கவே செய்கிறது. கெளதம புத்தபிரான் உலகத்துக்கு ...
நாட்டில் கொரோனாத் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைவது பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர். எனினும் கொரோனாத் தொற்றுக் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனாத் தொற்றில் இருந்து இலங்கையைக் காப்பாற்றுவதற்கு உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்து ...
2020ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் (04) வெளியாகின. பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் போதெல்லாம் அதன் மீதான கவனயீர்ப்பு எம்மிடம் உச்சமாக இருக்கும். அந்தளவுக்கு கல்வி மீது நம் தமிழ் மக்கள் பற்றும் அளவற்ற கரிசனையும் கொண்டவர்கள். ஒரு காலத்தில் இலங்கைத் தீவில் ...
உயர்பதவிகளில் இருக்கக்கூடிய அதிகாரிகள் தற்துணிவு உடையவர்களாகவும் தமது பதவிகளை மக்கள் பணிக்காகப் பயன்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மாறாக, தமக்குக் கிடைத்த பதவி இறை வனால் தரப்பட்டது என்ற நினைப்பும் இறை வனால் தரப்பட்ட பதவியை மக்கள் தொண்டு செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற மனத்திடமும் இருக்க வேண்டும். ...
கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது. நிலைமை எவ்வாறாகுமோ என்ற ஏக்கம் மக்களைப் பீடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாடசாலைகளை மூடியும் பொது நிகழ்வுகளை நிறுத்தியும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள இடங்களை முடக்கியும் தொற்றைத் தடுக்கின்ற நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் எதுவரை நீடிக்கும் என்பது தெரியாத ...
உலகம் முழுவதையும் உலுக்கி நிற்கும் கொரோனாத்தொற்றில் இருந்து மக்களைப்பாதுகாப்பதில் நாடுகள் கடும் பிரயத்தனம் செய்கின்றன. எனினும் தொற்று ஏற்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டபோதிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. கொரோனாத்தடை மருந்துகள் கண்டறியப்பட்ட போதிலும் அவை சாதாரண மக்களை வந்தடைவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம். தவிர, ...
பரத நாட்டியம் எமக்கு மிக அறிமுகமான கலை. ஆடவல்லானின் திருத்தாண்டவங்கள் பரதத்தினூடாக வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால் பரத நாட்டியக்கலையைத் தமது பிள்ளைகளுக்குக்கற்பிப்பதில் நம் பெற்றோர்கள் அதிக விருப்பு உடையவர்களாக இருப்பதைக் காண முடியும். இங்கு பரதநாட்டியத்தின் அத்தனை அசைவுகளுக்கும் அடிநாதமாக இருப்பது நட்டுவாங்கம். தாம்… தீம்… தோம்… என்ற உச்சாடனம் ...