Type to search

Headlines Local News News

இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த தயார்

Share

இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். 

கண்டியில் நேற்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், இந்த ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அரசாங்கம் அதில் எவ்வித தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை. 

இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும். அதுகுறித்து அச்சப்பட வேண்டிய தேவையில்லை. அதனை நடத்தி முடிக்கும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கமும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link