Type to search

Headlines

வயோதிபர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

Share

சங்கானையில் வயோதிபர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற் றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் மார்க்கண்டு வேலாயுதம் (வயது -64), தங்கராஜா புவனேஸ்வரி (வயது -56) ஆகிய இருவருமே தாக்குதலுக்கு இலக்காகி வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின் வீட்டை பராமரிக்கும் பணியில் இருவரும் அங்கு தங்கியிருந்தனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link