Type to search

Uncategorized

பிறந்தநாள் நிகழ்வு ஏற்பாடு செய்த பெண் கைது

Share

வடமராட்சி குடவத்தை பகுதியில் அனுமதியின்றி பிறந்தநாள் நிகழ்வை ஏற்பாடு செய்த பெண் ஒருவரை நெல்லியடி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதுடன் ஒலிபெருக்கி சாதனங்கள் பலவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.


இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை கரவெட்டி சுகாதார பிரிவில் உள்ள வடமராட்சி துன்னாலை குடவத்தை பகுதியில் நடைபெற்றது.


குறித்த பகுதியில் சுகாதார பரிசோதகர் கள் அனுமதியின்றி பிறந்தநாள் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக கரவெட்டி சுகாதார பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டபோது பிறந்தநாளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


இதனால் பிறந்த நாள் நிகழ்வை ஏற்பாடு செய்த பெண் ஒருவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ஒலி பெருக்கி சாதனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link