Type to search

Headlines Uncategorized

சவால்களை வெற்றிகொள்ள போராடுவதுதான் சுகவாழ்வுக்கான தேவை.

Share

சவால்களை வெற்றிகொள்ள போராடுவதுதான் சுகவாழ்வுக்கான தேவை. உலகம் இயந்திரமயமாகி சுதந் திரங்கள் பறிபோய் பூமிக்காற்றுப் புகையாகி, புழுதி மண்டலமாகி, ஓசோன் படலத்தில் ஓட்டைவிழுந்து, பூமியைக் கதிர் வீச்சுக்கள் தாக்க, இலட்சக்கணக்கான பச்சை மரங் கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு, பாவப் பட்ட மண் பாலைவனமாகிக் கொண் டிருக்கிறது.
இயற்கையான இனிய கனிகளுக்குக்கூட இரசாயனம் தெளிக்கப்பட்டுப் பகட்டான நச்சுக் கனிகள் ஆக்கப்பட பொலித்தீன்கள் எம்மை ஆக்கிரமிக்க மனிதன் நோய் வாய்ப்பட்டுக் கொண்டிருக்கி றான். இந்தச் சவால்களை எதிர் கொள்ள சுற்றாடல் பாதுகாப்பு சம் பந்தமான விழிப்புணர்வு பரந்துபட்ட அளவில் ஏற்படுத்தப்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

எமது சிறார்களுக்கு சுகம் சம் பந்தமான அறிவைச் சிறுவயதி லேயே புகட்டுவோம். உடற் பயிற்சி, ஆரோக்கிய உணவுமுறை, உடல் நிறை பேணுதல், ஆரோக்கிய வாழ்க்கை முறை, சுற்றாடல் பாது காப்பு என்பவற்றை அவர்களின் மனது ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லிக் கொடுப்போம். ஒவ்வொரு மனிதனும் தான் ஒரு ஆரோக்கிய மானவன், சுகதேகி என்று எண் ணிக் கொள்வது அவனைப் பல நோய் நிலைகளிலிருந்து காக்கும். கடுமையான நோய் நிலைகளிலே பெரும்பாலானவை மனிதனின் கவ னக் குறைவினாலும் போதியளவு மருத்துவ அறிவு இல்லாததனாலுமே ஏற்படுகின்றன.
எனவே நாம் மருத்துவம் சம்பந் தமான தகவல்களை அறிவதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். இயந்திர மயமாகி விட்ட இந்த உலகை நாம் புத்திசாதுரியமாக சாதகமாக பயன்படுத்த கற்றுக் கொள்வோம். விஞ்ஞான வளர்ச்சியினால் மனிதன் சராசரியாக வாழும் வயதெல்லை அதிகரித்திருக்கிறது.

கற்கை, கற்பித்தல் செயற்பாடுக ளில் புரட்சிகர மாற்றங்கள் நிகழ்ந் திருக்கின்றன. தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பாரிய வளர்ச்சியினால் உலகம் ஒரு குடும்பம் போல நெருங்கி வந்திருக்கின்றது. இந்த நல்ல மாற்ற ங்களை எமது சுகாதார மேம்பாட்டுக் குப் பயன்படுத்திக் கொள்வோம்.

மனச்சோர்வு, உலக சவால்களை எதிர்கொள்வதில் ஏற்படும் கஷ்ட நிலை என்பன பல சுகாதாரப் பிரச் சினைகளை ஏற்படுத்தி நிற்கின்றன. இவை தற்கொலைகளில்கூட முடி கின்றன. தற்கொலை என்பது வாழ் ந்தது போதும் என்ற எண்ணமே அன்றி இறப்பதற்கான விருப்பம் அல்ல. அவ்வாறான எண்ணம் தற்காலிகமானது என்பது உணரப் படவில்லை. தற்கொலையில் ஈடுபடு பவரில் பலர் ஒரு கணநேரத்தில் இவ்வாறான முடிவை எடுத்துவிட்டு இறுதியில் தாம் காப்பாற்றப்பட வேண் டும் என்ற எண்ணத்தில் மருத்துவ சேவைகளை நாடுகின்றனர்.

இவ்வாறு அதிகரித்து வரும் தற் கொலை முயற்சிகளை தடுத்து நிறு த்த சமூக மட்டத்திலே பல்வேறுபட்ட தரப்புகளின் கூட்டு முயற்சி அவ சியமாகின்றது.
உலகிலே உடற்பருமன் அதிக ரிப்பால் ஆண்டுதோறும் 30 இல ட்சம் பேர் இறக்கின்றனர் எனும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கின்றது. உடல் நிறை பராமரி ப்பு உயிர் காக்கும் என்ற தகவல் ஒவ்வொரு வரையும் சென்றடைய வேண்டும்.
மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம், மருந்து, சுவாசக் காற்று, நிழல், குளிர்ச்சி, மன அமைதி, மழை, நீர், எரிபொருள், மகிழ்ச்சி என அனைத்தையுமே தொடர்ந்து அள்ளி வழங்கிக் கொண் டிருக்கும் தாவரங்களையும் மரங்க ளையும் நட்டு வளர்ப்பதில் பெருமி தம் கொள்வோம்.

மனதிற்கு பிடித்த நல்ல காரியங் களில் மனதை செலுத்துவோம். மனதையும் உடலையும் சுற்றாட லையும் தூய்மையாகப் பேணி சுகம்பெறுவோம்.

Dr. சி . சிவன்சுதன்
பொது வைத்திய அதிகாரி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link