Type to search

Uncategorized

இறுக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுங்கள்

Share

அதிசயங்களால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. இறுக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கை மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தாமதித்தால் நாட்டை முழுமையாக முடக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர், வைத்திய கலாநிதி நவீன் டி சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று செய்தியாளர் களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
அதிசயங்களை நிகழ்த்தி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது. தீவிரமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.


இனியும் தாமதித்தால் முழு நாட்டையும் முடக்க வேண்டி ஏற்படும். உரிய அதி காரிகள் சிறப்பாகச் செயற்பட்டால் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவது இன்னும் சாத்தியமான நிலையிலேயே உள்ளது. தாமதித்தால் நிலைமை கைமீறும் என வும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link